Sunday, 31 December 2023

பறவைகள்... பலவிதம்...முக்குளிப்பான்


ஏரிகளிலும் குளங்களிலிலும் நீந்திக்கொண்டும் சட்டென்று நீரில் மூழ்கி கண நேரத்தில் மறைந்து வேறொரு இடத்தில் தலைக்காட்டும் பறவையைப் பார்த்திருப்பீர்கள். நீரில் நீந்தி வாழும் இந்தப் பறவை அடிக்கடி நீருக்குள் முங்கி முங்கிக் குளிப்பதால், பெயரே முக்குளிப்பான் ஆகிவிட்டது.

மாலை வேலைகளில் தண்ணீரின் பரப்பில் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டு 'கிச் கிச்' என்ற ஒலி எழுப்பும். வரிகளை உடைய உடலைப் பெற்றிருக்கும் இவற்றின் குஞ்சுகள் தாய்ப்பறவையின் முதுகில் ஏறி சவாரி செய்யும் காட்சி அழகானது.
முக்குளிப்பான் (Little Gerbe) 

(Tachybaptus ruficollis)  முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். பழுப்பு நிறமும் உருண்டு திரண்ட உடலையும் இவைப் பெற்றுள்ளன. குட்டையான, கூரான அலகைக்கொண்ட வாலற்ற இந்தப் பறவைகள் ஏரிகளிலும் , குளங்களிலும் இணையாகவோ கூட்டமாகவோ காணப்படும். முட்டையிடும் காலத்தில் தலையும் கழுத்தும், அடர்ந்த மாநிறமாகவும், வாயின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாக மாறும். 




இவை குட்டையான சிறகுகளைப் பெற்றிருப்பினும் நன்றாகப் பறக்கக்கூடியவை.  அவை வாழும் குளத்தில் நீர் வற்றி விட்டால்  தொலைவிலுள்ள மற்றொரு குளத்திற்குப் பறந்து செல்லும்.

இவற்றின் உணவுகள் நீர்ப்பூச்சிகள், புழுக்கள்,  தலைப்பிரட்டைகள்,  தவளைகள்,  நத்தைகள், சிறுமீன்கள் ஆகும்.முக்குளிப்பான்கள் தனது கூடுகளை புற்களாலும், செடிகளாலும், தண்ணீருக்கடியில் மூழ்கி நிற்கும் செடிகளின் மேல்கட்டி மூன்று முதல் ஐந்து முட்டைகள்வரை இடும். இந்திய வாத்தான இதை நீர்ப்புள் எனவும் அழைப்பர்.


பாலா பாரதி

No comments:

Post a Comment