Monday 17 April 2017

ஜெர்டன் வானம்பாடி

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ.... "
ஜெர்டன் வானம்பாடி | Jerdon's Bushlark | Kallanai Trichy | March'17
வானம்பாடிகள் வீட்டுக் குருவிகளை விட அளவில் சற்று பெரிதாகக் காணப்படும். இவற்றை வயல்வெளிகளிலும், புதர்களிலும் பார்க்கலாம். வானம்பாடியினத்தின் ஒருவகை இந்த ஜெர்டன் வானம்பாடி.
இப்பறவை ஜெர்டன் என்ற ஆங்கில பறவையாளரின் பெயரால் அழைக்கப்படுகிறது. மருத்துவரான தாமஸ் கேவரிஹில் ஜெர்டன் விலங்கியளாளராகவும், தாவரவியளாளராகவும் விளங்கியவர். இவர் இந்தியாவில் உள்ள பறவைவைகள், தாவரங்களை ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். 'The Birds of India' என்ற நூலை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். இந்தியாவில் பறவைகளைப்பற்றி வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு இந்த நூலே முன்னோடியாக அமைந்தது. இவரின் இந்த அறிய பணியைப் பாராட்டும் விதமாக இவர் பெயரை சில தாவரங்களுக்கும் (ஜெர்டோனியா) பறவைகளுக்கும் (ஜெர்டன் கோர்சர்) வைத்துள்ளனர்.
- பாலா பாரதி




Image may contain: bird



No comments:

Post a Comment