Tuesday 28 November 2017

ஒரு மரம் எத்தனை பறவைகளுக்கு உணவளிக்க முடியும்?...

ஒரு மரம் எத்தனை பறவைகளுக்கு உணவளிக்க முடியும்?...
ஒருநாள் தொட்டபெட்டா பகுதியில் பறவைகள் பார்த்தலின் போது திடீரென இந்த வினா மனத்தில் எழ, அங்கிருந்த ஒரு மரத்தின், ஒரு கிளையின், ஒரு கொப்பைத் தேர்ந்தெடுத்து அரைமணி நேரம் அதைக் கண்காணிக்க முடிவுசெய்த நமக்கு கிடைத்த விடையோ சுவாரஸ்யமானது.
அது என்ன மரம் என்றுகூட நமக்கு தெரியவில்லை, ஆனால் அம்மரத்தின் ஒரு கிளையில் உள்ள ஒரு கொப்பில், அது பூவா, சிறிய பழமா எனத் தெரியவில்லை. அதைச் சாப்பிட அந்த அரைமணி நேரத்தில் ஒரு கரிச்சான், ஒரு கொண்டைக்குருவி, இரண்டு மாம்பழச்சிட்டுகள் என நான்குப் பறவைகள் வந்ததைப் பதிவு செய்தோம்.
ஒரு மரத்தின், ஒரு கிளையின், ஒரு கொப்பு அரைமணியில் நான்கு உயிரினங்களுக்கு உணவளிக்க முடியுமெனில், காட்டிலுள்ள மரங்கள் அனைத்தும் சேர்ந்து எத்தனை பறவைகளுக்கு உணவளிக்க முடியும் என எண்ணி காட்டின் பிரமாண்டத்தை வியந்தவாறே வீடுவந்து சேர்ந்தோம்.
- பாலா பாரதி

No comments:

Post a Comment