Tuesday 28 November 2017

கொண்டைக் குயில் | சுடலைக் குயில் | Pied Cuckoo | Jacobin Cuckoo

"இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்...
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்..."
இசையை அருந்தி வாழும் பறவை உண்டா?
மழைத்துளியை அருந்தி வாழும் பறவை உண்டா?
கொண்டைக் குயில் | சுடலைக் குயில் | Pied Cuckoo | Jacobin Cuckoo | Koothappar | Trichy
மழை வருவதை முன்கூட்டியே இப்பறவையின் வருகை அறிவிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் பருவமழை பரவப்பரவ இந்தப் பறவை இந்தியா முழுவதும் புலம்பெயரும். இதனால், இந்தப் பறவை வந்துப் பாடித்தான் மழைபொழிகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.
வடமொழி இலக்கியங்களில் இது சாதகப் பறவை எனக் கூறப்பட்டுள்ளது. இது தலையை மேலே உயர்த்தி அலகை விரித்தவாறு வானத்தையேப் பார்த்து வைராக்கியமாக, வேறு எந்த நீரையும் குடிக்காது மழை நீரை மட்டுமே குடிக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றுக்கு தாகம் ஏற்பட்டால் வானத்தைப் பார்த்துப் பாடுவதாகவும் அப்போது வானமே இரங்கி மழையை அனுப்புவதாகவும் பாடப்பட்டுள்ளது.
மற்றப் பறவைகளைப் போலவே இந்தப் பறவையும் நீர்நிலைகளில் இருந்துதான் நீரை அருந்தும். வெறும் மழைநீரை குடித்தோ இசையைக் கேட்டோ வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது.
- பாலா பாரதி

No comments:

Post a Comment