Thursday 22 December 2016

பஞ்சுருட்டான்

"காக்கா காக்கா மை கொண்டா...
காடைக் குருவி மலர் கொண்டா...
பச்சைக் குருவியே பழம் கொண்டா...
கல்லைக் கையால் தொட மாட்டேன்...
தொல்லை ஏதும் தர மாட்டேன்...
சொல்லால் செயலால் உங்களுக்கே
நல்லன எல்லாம் செய்திடுவேன்..."

பஞ்சுருட்டான் | Green Bee Eater | Cinnar | Dec'16
இவை அளவில் சிறியதாக இருந்தாலும் அழகில் சிறந்தவை. மரகதம் போன்ற பசுமை நிற உடலையும் மஞ்சள்நிற தலையையும் கொண்டிருக்கும். இரண்டு வாற்சிறகுகள் மற்றவையினும் நீண்டு காணப்படும். வேலிகளிலும், தந்திக் கம்பிகளிலும் உட்கார்ந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்திருக்கும் இவற்றின் கண்களிலிருந்து சிறு பூச்சியும் தப்ப முடியாது.
தீடீரெனப்பறந்து பூச்சியைப்பிடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். இவை மணற்பாங்கான கரைகளில் மணலில் பள்ளம் பறித்து முட்டையிடும். முட்டையிடாத காலங்களில் மாலையில் கூட்டமாக ஒரு புதர்களில் அடையும். அப்போது இவைகளின் சிறு குரல்கள் சேர்ந்து ஒலிப்பது தூரத்தில் சிறு மணிகள் ஒலிப்பதுபோலிருக்கும்.

- பாலா பாரதி

No comments:

Post a Comment