Wednesday 28 December 2016

பொறி உள்ளான்

"காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்...
அழுவதை கேட்க ஆட்களும் இல்லை...
அம்மா எங்களை அழைத்திடு தாயே..."
பொறி உள்ளான் | Wood Sandpiper | Trichy | Oct'16
நீர்நிலைகளின் ஓரமாக புறாவைவிட சிறிய அளவிலானப் பறவை தனது வாலை ஆட்டியவாறு தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டு புழு, பூச்சிகளைப் பிடிப்பதைப் பார்த்தீர்கள் என்றால் அதுதான் 'உள்ளான்'. உள்ளான் என்பது பொதுப்பெயர்.
பொதுவாக இவற்றின் அலகுகள் சேற்றில் இரைதேடுவதற்கு ஏதுவாக இருக்கும். பெரும்பாலும் நீர்நிலைகளின் ஓரங்களில் சிறிய முதுகெலும்பிகள், மண் புழுக்கள் போன்றவைகளை உணவாக உட்கொள்கின்றன.
ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இங்கு குளிர்காலத்தில் வலசை வருகின்றன.
- பாலா பாரதி


No comments:

Post a Comment