Thursday 22 December 2016

வெண்புருவ வாலாட்டி

"வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்
வாடி வாலாட்டி... வரியா... புலியா... தனியா திரிவோம்..."

வெண்புருவ வாலாட்டி | White-Browed Wagtail | Trichy | Dec'16

நம் வீட்டருகே வாலை ஆட்டியவாறு வீச், வீச், வீச் என்று குரல் கொடுத்து உங்கள் கவனத்தை நிச்சயம் இவை கவர்ந்திருக்கும். இவை மற்ற வாலாட்டிக் குருவிகளைவிட சற்று பெரியதாகவும், கருஞ்சிட்டு போல கறுப்பும் வெள்ளையும் கலந்து இருக்கும். இவற்றின் கண் இமை வெண்மையாக இருக்கும். இவை அழகாகப் பாடக்கூடியவை.
பொதுவாக இடம் பெயராத இப்பறவைகள் இரண்டு அல்லது மூன்றாகச் சேர்ந்து அங்குமிங்கும் ஓடித் திரிந்து பூச்சி, புழுக்களை தேடித் தின்னும். நீர்நிலைகளின் கரைகளில் கிடக்கும் கற்களின் மீது சுறுசுறுப்பாக இரை தேடிக்கொண்டிப்பதைக் காணலாம். மேலும் புல்தரை, சதுப்பு நிலம் போன்ற இடகளில்கூட இச்சிறிய குருவிகளைக் காணலாம்.
தன் நீண்ட வாலை நொடிக்கொருமுறை மேலும் கீழும் ஆட்டுவது அங்கு மறைந்துள்ளப் பூச்சிகளை வெளிக்கொணரவே. இப்பறவைகள் தாழ்ந்தெழுந்து பறக்கும். இவை நீரருகில் செடி மறைவில் தட்டு போன்று புல், வேர், குச்சிகள், துணித் துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு கூடு கட்டும். பொதுவாக இவற்றை நாம் எல்லா இடங்களிலும் காணலாம். நம்நாட்டில் ஏழுவகையான வாலாட்டிகள் காணப்படுகின்றன.

- பாலா பாரதி

No comments:

Post a Comment