Tuesday 27 December 2016

சாம்பல் நாரை

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே....
நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? ...
பல தோற்ற மயக்கங்களோ? ..."
சாம்பல் நாரை | Grey Heron | மணிகண்டம் திருச்சி | Dec'16
நீருக்கு அருகாமையில் வாழும் இப்பெரிய பறவையினம் உயரமாகவும், மெல்லிய நீண்ட வளைந்த கழுத்துடனும், நீண்ட கால்களுடனும் இருக்கும்.
இவை கருநாரை, நாராயணப் பட்சி, நரையான் பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு எனவும் அழைக்கப்படுகின்றன.
நீண்ட நேரம் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு மீன் வேட்டையாடும். மீன், தவளை, பாம்புகள்,பல்லிகள், சிறுபாலூட்டிகள் ஆகியவை இவற்றின் உணவுப் பட்டியலில் உள்ளன.
இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடைய இவை பறக்கும் போது ஆங்கில எழுத்தான "S" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும்.
- பாலா பாரதி

No comments:

Post a Comment