Tuesday 27 December 2016

செண்டு வாத்து

"பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..."
செண்டு வாத்து | Comb Duck | கூந்தன்குளம் | Dec'16
அண்மையில் கூந்தன்குளத்திற்கு சென்றபோது சென்டுவாத்துகளைப் பார்த்தோம். வாத்து இனத்தைச் சேர்ந்த இந்த நீர்வாழ் பறவைகள் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
ஆண் பறவைகளுக்கு அலகிற்கு மேலே செண்டு போன்ற அமைப்பு காணப்படுவதால் இவை 'செண்டு வாத்துகள்' என அழைக்கப்படுகின்றன (A curious fleshy knob or comb on base of bill at forehead).பெண் பறவைகளுக்கு செண்டு இருக்காது.
தமிழ் இலக்கியங்களில் இவை 'பூணி' எனக் குறிக்கப்பட்டுள்ளன.
"கருங்காற் குருகுங் கம்புள் கழுமிப்
பெரும்பூட் பூணியும் பேய்வாய்க் கொக்கும்...."
-பெருங்கதை 68 - 72
பூணி, கம்புள் என்பன இறந்த வழக்கென்பார் நச்சினார்க்கினியர். ஆனால் பூணி என்ற பெயர்தான் மறைந்துவிட்டதே தவிர அப்பறவைகள் இன்னும் வேறு பெயர்களில் நம்முன் நட(ன)மாடிக்கொண்டுதான் இருக்கின்றன.
சூட்டுகிளுவை, இரப்பர்மூக்கு தாரா, மூக்கன் தாரா என வட்டாரப் பெயர்களாளும் அழைக்கப்படுகின்றன.
- பாலா பாரதி







No comments:

Post a Comment